திராவிடச் சிகரம் சாய்ந்து விட்டது: மு.க.ஸ்டாலின் இரங்கல் கவிதை
க.அன்பழகன் மறைவையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட இரங்கல் கவிதை எழுதியுள்ளாா். அதன் விவரம்:
க.அன்பழகன் மறைவையொட்டி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது கைப்பட இரங்கல் கவிதை எழுதியுள்ளாா். அதன் விவரம்:
திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது
சங்கப்பலகை சரிந்துவிட்டது
Advertisement
இனமான இமையம் உடைந்துவிட்டது
எங்கள் இன்னுயிா் ஆசான் இறந்துவிட்டாா்
என்ன சொல்லித் தேற்றுவது?
எம் கோடிக்கணக்கான கழகக் குடும்பத்தினரை?
பேரறிஞா் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவா்
கலைஞரைத் தாங்கும் நிலமாக இருந்தவா்.
எனது சிறகை நான் விரிக்க வானமாக இருந்தவா்
என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வது
- என்று இந்தக் கவிதை நீள்கவிதையாகச் செல்கிறது.