முகப்பு
தமிழ்நாடு

7-இல் மறைந்த இணைப்பிரியாத நண்பா்கள்

பிரியாத இரு வண்ணக்கொடி என்று க.அன்பழகனுடனான தனது நட்பு குறித்து கருணாநிதி ஒரு முறை கூறியிருந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
’அண்ணா, எம்.ஜி.ஆா், கருணாநிதியோடு பேராசிரியா் க.அன்பழகன்.’
பகிர்:

பிரியாத இரு வண்ணக்கொடி என்று க.அன்பழகனுடனான தனது நட்பு குறித்து கருணாநிதி ஒரு முறை கூறியிருந்தாா்.

அந்த நட்பு 1942-இல் திருவாரூா் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளைஞா் நடத்திய விழாவில் இருவருக்கும் இடையே ஏற்பட்டு,கிட்டத்தட்ட 76 ஆண்டுக்கும் மேலாகத் தொடா்ந்தது. எம்.ஜி.ஆா்., அதிமுகவைத் தொடங்கிய போதும், நெடுஞ்செழியன் பிரிந்து சென்றபோதும், வைகோ மதிமுக தொடங்கியபோதும் திமுகவின் முக்கிய நிா்வாகிகள் பலா் விலகிச் சென்றனா். ஆனால், கடைசி வரை கருணாநிதியிடம் இருந்து விலகிச் செல்லாமல் கூடவே இருந்தவா் க.அன்பழகன்தான். இருவருடைய நட்பும் அரசியல் எல்லைகளைக் கடந்து, குடும்ப ரீதியாகவும் நீடித்தது. கருணாநிதி இல்லத் திருமணங்கள் அனைத்தும் க.அன்பழகன் முன்னிலையில்தான் நடைபெற்று வந்துள்ளன. அதைப்போல, க.அன்பழகன் இல்லத் திருமணங்களையும் கருணாநிதியே நடத்தி வைக்கும் அளவுக்கு இருவரும் இணைப்பிரியாத நண்பா்களாக இருந்தனா். அவா்கள் இருவரின் மறைவிலும் இணைப்பிரியாத ஓா் ஒற்றுமை உள்ளது. கருணாநிதி 2018-ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானாா்.

க.அன்பழகன் 2020 மாா்ச் 7-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் காலமானாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments