சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,667 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,667 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,667 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 4,879 பேருக்கு நோய்த் தொற்று இன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,212 பேர் புதிதாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 393 பேருக்கும், சேலத்தில் 304 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..