முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,752 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 6:26 PM
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,752 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,08,511 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 991 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் 53 பேர் (அரசு மருத்துவமனை -34, தனியார் மருத்துவமனை -19) பலியானதாக இன்றைய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரேநாளில் 5,799 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,53,165 பேர் குணமடைந்துள்ளனர். 46,912 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 80,123 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 59,68,209 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கோவை மற்றும் புதுக்கோட்டையில் புதிதாக 2 தனியார் பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 65 அரசு ஆய்வகங்கள், 105 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 170 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.