பணப்பட்டுவாடாவை ஆணையம் கண்டுகொள்ளவில்லை: சீமான்
பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடுபணப்பட்டுவாடாவை ஆணையம் கண்டுகொள்ளவில்லை: சீமான்
பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்திலுள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, வாக்கு எண்ணும் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். வாக்களிக்கும் முறையை இயந்திரமாக மாற்றிவிட்ட நிலையில், தொழில்நுட்பத்தை கையாண்டு முடிவுகளை அறிவிப்பதில் ஏன் காலதாமதம்.
தேர்தல் நடத்தும் முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வாக்கு செலுத்த வாக்குப் பதிவு இயந்திரம் முறை பின்பற்றுவது துயரமானது.
பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார்.