தமிழிசை சௌந்தரராஜன் கணவருடன் வந்து வாக்களித்தார்
தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார்.
சென்னை: தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது கணவருடன் வந்து ஜனநயாகக் கடமையை ஆற்றினார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிளாரென்ஸ் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்குப்பதிவு 7 மணிக்குத் தொடங்கினாலும் காலை 6 மணி முதலே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.