வேதாரண்யம் அருகே இடியுடன் கூடிய மழை
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாய்மேடு சுற்றுப் பகுதியில் இடியுடன் கூடிய மழை இன்று (ஏப்.15) காலை முதல் பெய்து வருகிறது.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாய்மேடு சுற்றுப் பகுதியில் இடியுடன் கூடிய மழை இன்று (ஏப்.15) காலை முதல் பெய்து வருகிறது.
வாய்மேடு, தகட்டூர், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கடலோர கிராமப்புறங்களில் அதிகாலையில் லேசான மழை பெய்தது.
பின்னர் காலை 7.30 மணி தொடங்கி தென் மேற்கு திசையில் இருந்து வீசிய பலத்த காற்றுடன் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டது. இது சுமார் 1 மணி நேரம் நீடித்தது. தொடர்ந்து மந்தமான வானிலையே நீடித்து வருகிறது.