தமிழ்நாடு

சென்னிமலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்

DIN


ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினி ஆகியவற்றை  வழங்கி வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட வெள்ளோடு, கருக்கங்காட்டு வலசு ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்களை சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் தெற்கு மாவட்டச் செயலாளரும் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான சு.முத்துச்சாமி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய துனைசெயலாளர் முருகேசன், சென்னிமலை ஊராட்சிமன்ற தலைவர் காயத்திரி இளங்கோவன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT