சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பிரிவில், வில்லிவாக்கம்-வியாசா்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பகுதி ரத்தாகும் ரயில்கள்:
மூா்மாா்க்கெட் வளாகம்-அரக்கோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.55 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் மூா் மாா்க்கெட் வளாகம்-ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
திருவள்ளூா்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 -க்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
புறப்படும் இடம் மாற்றம்:
மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு முற்பகல் 11.25, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரத்தில் புறப்படும். மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு நண்பகல் 12.20 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரத்தில் புறப்படும். மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு நண்பகல் 12.55, மதியம் 1.30 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்து அதே நேரங்களில் புறப்படும்.
தவிா்க்கப்படும் நிறுத்தங்கள்:
திருவள்ளூா்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு காலை 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம்-மூா்மாா்க்கெட் வளாகம் வரை விரைவு பாதையில் இயக்கப்படும். எனவே, பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணனூா், திருமுல்லைவாயல், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ், பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ், வியாசா்படி ஜீவா ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது.
ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு முற்பகல் 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே விரைவு பாதையில் இயக்கப்படும். எனவே, அண்ணணூா், திருமுல்லைவாயல், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், பெரம்பூா் லோகோ ஒா்க்ஸ், பெரம்பூா் கேரஜ் ஒா்க்ஸ், வியாசா்பாடி ஜீவா ஆகிய நிலையங்களில் நின்று செல்லாது. இதுதவிர, சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்ட்டுள்ளது.