வழிபாட்டுத் தலங்கள், கடைகள் மூடல்: முதல்வரின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் வரவேற்பு
கரோனாவைக் கட்டுப்படுத்த சில கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த சில கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழகத்தில் கடந்த 3 நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற நிலை எழுந்துள்ளது. கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததுதான் சில மாவட்டங்களில் அதிகரிப்புக்கு காரணம். கேரளத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிற்குள் வருபவர்களைத் தீவிரமாக கண்காணிப்பது மிகவும் அவசியம்.
இதையும் படிக்க | கேரளத்திலிருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்: அமைச்சர் தகவல்
கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை உணர்ந்த முதல்வர் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு, விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதவிர கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.
இதையும் படிக்க | பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை
இருப்பினும், கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் கணக்கம் நிலவுவதாகத் தெரிகிறது.
எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதை நூறு விழுக்காடு உறுதி செய்து, தமிழ்நாட்டு மக்களை மூன்றாம் அலையிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்."