ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய சட்டம் இயற்றப்படுமா?
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பல உயிர்கள் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் நிறுவனங்களின் வழக்கில் நீதிமன்றம் தந்த நிபந்தனைகளை கருத்தில் கொண்டு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.