கோவையில் புதிதாக 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 190 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 172 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னைக்கு ஈரோட்டில் 138 பேரும், அடுத்தபடியாக தஞ்சாவூரில் 98 பேரும், செங்கல்பட்டில் 92 பேரும், கடலூரில் 689 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகப்படியாக திருப்பூரில் 5 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 4 பேரும், சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, பெரம்பலூர், சேலம், பெரம்பலூரில் தலா இருவரும் உயிரிழந்தனர்.