சசிகலா 
தமிழ்நாடு

ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்லலாம்: சசிகலா

நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

DIN


சென்னை: நம் தலைவர்கள் காட்டிய வழியில் ஒற்றுமையுடன் இருந்தால் எதிரிகளை வெல்ல முடியும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
அதிமுக தலைமையகத்தில் அதிமுக தொண்டர்களான பிரதாப் சிங், ராஜேஷ் ஆகியோர் தாக்கப்பட்டது வேதனையளிக்கிறது. இனியும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால் சும்மா இருக்க முடியாது. 

மேலும் தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தும்போதுதான் அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும். எந்த இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களை மதிக்க வேண்டும். 

ஒரு இயக்கத்துக்கு தேவை கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல.  நாம் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். இன்று அதிமுக தொண்டர்களின் நிலையை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கண்ணீருடன் பார்த்து கொண்டிருப்பார்கள் என சசிகலா கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்

இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோல் இந்தியா உற்பத்தி சரிவு

ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்

நின்றிருந்த லாரி மீது காா் மோதி 5 போ் பலத்த காயம்

SCROLL FOR NEXT