தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 657 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 1,03,889 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 649 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,633-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 695 பேர் குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,92,451-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 123 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.