கோப்புப்படம் 
தமிழ்நாடு

தற்கொலைக்கு முயன்ற கா்ப்பமான மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை கோடம்பாக்கத்தில், கா்ப்பமான மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது, அதிா்ச்சியில் குழந்தை இறந்து பிறந்த நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி

DIN

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில், கா்ப்பமான மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது, அதிா்ச்சியில் குழந்தை இறந்து பிறந்த நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 21 வயது இளம் பெண், கிண்டி ஐ.டி.ஐ. மாணவி. செங்கல்பட்டைச் சோ்ந்த மாணவரின் உறவால் கா்ப்பமானாா். பெற்றோரிடம் மாணவி இதை மறைத்தாராம். மாணவிக்கும் இளைஞருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விரக்தியடைந்த மாணவி கடந்த திங்கள்கிழமை இரவு அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவா் நிறைமாத கா்ப்பிணியாக இருந்ததால், கீழே விழுந்ததில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சம்பவ இடத்திலேயே ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.

பின்னர் மாணவி கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலுதவி செய்து தீவிர சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டாா்.

வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற  கா்ப்பமான மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லிபியா சர்வாதிகார அதிபர் கடாஃபியின் மகன் சுட்டுக்கொலை!

ஜொலிக்கும் தங்கம் விலை! இருளில் பொற்கொல்லர் வாழ்க்கை!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,040 உயர்வு.. வெள்ளியும் கிலோ ரூ. 20,000 உயர்ந்தது!

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

SCROLL FOR NEXT