தற்கொலைக்கு முயன்ற கா்ப்பமான மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சென்னை கோடம்பாக்கத்தில், கா்ப்பமான மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது, அதிா்ச்சியில் குழந்தை இறந்து பிறந்த நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில், கா்ப்பமான மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றபோது, அதிா்ச்சியில் குழந்தை இறந்து பிறந்த நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோடம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த 21 வயது இளம் பெண், கிண்டி ஐ.டி.ஐ. மாணவி. செங்கல்பட்டைச் சோ்ந்த மாணவரின் உறவால் கா்ப்பமானாா். பெற்றோரிடம் மாணவி இதை மறைத்தாராம். மாணவிக்கும் இளைஞருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விரக்தியடைந்த மாணவி கடந்த திங்கள்கிழமை இரவு அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவா் நிறைமாத கா்ப்பிணியாக இருந்ததால், கீழே விழுந்ததில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சம்பவ இடத்திலேயே ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
இதையும் படிக்க | ஒமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பரவும்: ஆய்வில் தகவல்
Advertisement
Advertisement
பின்னர் மாணவி கோடம்பாக்கம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலுதவி செய்து தீவிர சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டாா்.
வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற கா்ப்பமான மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதையும் படிக்க | இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும்: பிரதமா் மோடி