தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் மீது வழக்கு

DIN

நாகப்பட்டினம்: தமிழக அரசைக் கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மக்கள் பிரச்னையில் திமுக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நாகை மாவட்ட அதிமுக சார்பில்  நாகை அவுரித்திடலில் கண்டன  ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 

கட்சியின் மாவட்டத்தலைவர் ஆர்.ஜீவானந்தம் தûலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுத  நாகை மாவட்டச் செயலாளரும்,  வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், அதிமுக  மாவட்ட அவைத்தலைவர் ஆர்.ஜீவானந்தம்,
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளர் எஸ். ஆசைமணி, நாகை நகரச் செயலாளர் தங்க.கதிரவன், நகர அவைத் தலைவர் ப. அறிவழகன் மற்றும் பலர் மீது சட்ட விரோதமாக பொது  இடத்தில் கூடுதல், வழிமறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெளிப்பாளையம் நாகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT