முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் ஆண்டு விழா: ஈரோட்டில் கொடியேற்றி காங்கிரஸார் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஈரோட்டில்   கட்சிக் கொடியேற்றி  காங்கிரஸார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று காலை ஈரோடு மாநகரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நிர்வாகிகள் கொடியேற்றி, மகாத்மா காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத் தலைவர் ஜெ.சுரேஷ்,  விஜயபாஸ்கர்  மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் பாஷா, மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், முன்னாள் சூரம்பட்டி கவுன்சிலர் சாம்ராட் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காங்கிரஸ்  137- வது  நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.

மொடக்குறிச்சி பகுதியில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.ராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி கிழக்கு வட்டாரத் தலைவர் கதிர்வேல், தெற்கு வட்டாரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வடக்கு வட்டாரத் தலைவர்  ரவி, மாவட்டச் செயலாளர் பூவை ராஜன் ஆகியோர் கலந்துகொணடனர்.

முழு கட்டுரையைப் படிக்க →