முகப்பு
தமிழ்நாடு

சசிகலா வருகையால் அமைச்சர்கள் பதற்றமடைவது ஏன்? டிடிவி தினகரன்

சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ள நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
சசிகலா வருகையால் அமைச்சர்கள் பதற்றமடைவது ஏன்? டிடிவி தினகரன்
பகிர்:

சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப உள்ள நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, சசிகலாவை வரவேற்க ஜெயலலிதா மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை.

நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். 

அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும் தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

மேலும், ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சசிகலாவால் தொடரப்பட்டு சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →