முகப்பு
தமிழ்நாடு

சிலம்பம்: திருவள்ளூரைச் சேர்ந்த 5 பேருக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கம்

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் வீர அபிமன்யு அகாதெமியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேருக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் வென்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
சிலம்பம்: திருவள்ளூரைச் சேர்ந்த 5 பேருக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கம்
பகிர்:

திருவள்ளூர்: மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் திருவள்ளூர் வீர அபிமன்யு அகாதெமியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 5 பேருக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் வென்றனர்.

அமெச்சூர் சிலம்பம் கழகம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி கன்னியாகுமரியில் உள்ள சி.எஸ்.ஐ. அரங்கத்தில் கடந்த 5,6,7 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

இதில் ஜூனியர், சப் ஜீனியர் என கம்புச் சண்டை, கம்பு வீச்சு, அலங்கார கம்பு வீச்சு, ரெட்டை சுருள்வாள் வீச்சு, போன்ற பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் இருபாலரும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் திருவள்ளூர் வீர அபிமன்யு சிலம்பம் அகாதெமி பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் மாணவர் அக்ரிஷ் மினி ஜூனியர் நேரடி போட்டியில் வெள்ளிப்பதக்கமும், ஜூனியர் பிரிவில் எஸ்.கோகுல் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

அதேபோல் சீனியர் பிரிவில் பெண்களுக்கான போட்டியில் எஸ்.யேமாவதி ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் மற்றும் அலங்கார வீச்சு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்.

அதேபோல், சீனியர் பிரிவில் ஆண்களுக்கான சிலம்ப நேரடி போட்டியில் கே.ஹரிஷ் வெண்கலமும், இரட்டை வாள் சுருள் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.

சீனியர் பிரிவில் ஆண்களுக்கான அலங்கார கம்பு வீச்சு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றனர். இப்போட்டியில் பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவிகளை சிலம்ப பயிற்றுநர் கே.பாஸ்கர் பாராட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →