மயிலத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்
மயிலம் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.மாசிலாமணி தலைமை தாங்கினார். மயிலம் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சேதுநாதன் முன்னிலை வகித்தார்.
திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம், மாநில மருத்துவர் அணி டாக்டர் சேகர், அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச்செயலாளர் மலர்மன்னன், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு கே.எஸ்.அன்சாரி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
தி.மு.க மாவட்டச் செயலாளரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஆர்.மாசிலாமணி ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது திடீரென்று மின்தடை ஏற்பட்டது.
இதனைக் கண்டித்து தி.மு.க., வினர் புதுச்சேரி - மயிலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டதாலும், மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டதாலும் போராட்டம் கைவிடப்பட்டது.