முகப்பு
தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி: அவிநாசி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி ராயம் பாளையத்தில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
பகிர்:

அவிநாசி ராயம் பாளையத்தில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, 

அவிநாசி அரசு கலைக்கல்லூரி முதல் ராயம்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக சாலைகள் தோண்டப்பட்டுப் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புழுதி காடாகக் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இதுகுறித்து பலமுறை முறையிட்டும் பேரூராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக சாலைப் பணியைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதில் சாலைப் பணியை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் உடன் பேசி செவ்வாய்க்கிழமை பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை காலை, மாலை இரு நேரங்களிலும் மண் புழுதி பறக்காமல் இருக்கத் தண்ணீர் விடப்படும் என உறுதி அளித்துள்ளார். செவ்வாய்க்கிழமைக்குள் பணிகளைத் தொடங்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →