விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள். 
தமிழ்நாடு

ஶ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி மூன்று பேர் பலி

ஶ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். 

DIN


ஶ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். 

ஶ்ரீபெரும்புதூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஶ்ரீ வெங்கடேஷ்வரா கேட்டரிங் சர்வீஸ் என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த  காட்டரம்பாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ்(40), காட்டரம்பாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன்(40), அமரம்பேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(42) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீஸார் பலியானவர்களின் சடலங்களை மீட்டு ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து சோமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

ஞாயிறு பட்ஜெட்.. முந்தைய நாளில்!

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது.. மறக்காமல் இதைச் செய்ய வேண்டும்!

காங்கோவில் சுரங்கம் சரிந்து விபத்து: 200 பேர் பலி!

டி20 உலகக் கோப்பையிலிருந்து கம்மின்ஸ் விலகல்..! வேகப் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT