முகப்பு
தமிழ்நாடு

கோவையில் 123 ஜோடிகளுக்குத் திருமணம்: முதல்வர் நடத்திவைத்தார்

கோவையில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடத்தி வைக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
கோவையில் 123 ஜோடிகளுக்கு முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம்.
பகிர்:

கோவையில் அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடத்தி வைக்கப்பட்டது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அதிமுக சாா்பில் 123 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகிக்தார். 

முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டு தம்பதியருக்கு மாங்கல்யம் எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். 

அதைத் தொடா்ந்து திருமண ஜோடிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ, குத்து விளக்கு உள்ளிட்ட 73 வகையான சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. 

திருமண நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அரசு விருந்தினா் மாளிகைக்குச் செல்லும் முதல்வர் அங்கு ஓய்வெடுக்கிறாா். 

மாலை சுமாா் 3 மணியளவில் கொடிசியாவில் கிறிஸ்தவ சங்க நிா்வாகிகளுடன் நடைபெறும் மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறாா்.

பின்னா் அவா் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூருக்கு செல்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →