முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறை: சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தும் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Updated On : 16 பிப்ரவரி, 2021 at 2:54 PM
மணப்பாறை: சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:02 AM

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, மணப்பாறை காவல்துறை மற்றும் இருசக்கர வாகனப் பழுது பார்ப்போர் நலச்சங்கங்கள் சார்பில் இருச்சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தும் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 32-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, மணப்பாறை உள்கோட்ட காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கங்கள் சார்பில் இருச்சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தும், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்தும் 200-க்கும் மேற்பட்டோர் சாலை விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆர்.பிருந்தா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். 

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மணிவண்ணன், காவல் ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொத்தமேட்டுபட்டி நேரு சிலையிலிருந்து துவக்கிய பேரணி திருச்சி சாலை, கோவில்பட்டி சாலை, கச்சேரி ரோடு, புதுத்தெரு, பேருந்து நிலையம், மதுரை சாலை, திண்டுக்கல் சாலை வழியாக சென்று பின் பெரியார் சிலை திடலில் நிறைவுபெற்றது. இதில் காவல்துறையினர், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தினர், பொதுநல அமைப்பினர் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.