ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி திரட்டும் வகையில் நிபந்தனையுடன் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கக்கோரி செல்லகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அவர், ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் வகையில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.