முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் மேலும் ஓர் காங். எம்.எல்.ஏ. ராஜிநாமா

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான ராஜிநாமா கடிதத்தை அளிக்கும் லட்சுமி நாராயணன்
பகிர்:

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை லட்சுமி நாராயணன் இன்று (பிப்.21) ராஜிநாமா செய்தார். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது.

இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, பிப்ரவரி 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

இதற்காக திங்கள்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவான க. லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் 13-ஆக குறைந்துள்ளது.  இதனால் பெரும்பான்மை நிரூபிப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. தொடரும் நெருக்கடி நிலை புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →