தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார் முதல்வர் பழனிசாமி
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.24) உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தீபம் ஏற்றி முதல்வர் பழனிசாமி இன்று (பிப்.24) உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் பழனிசாமி உறுதிமொழி ஏற்றார்.
இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் தீபம் ஏற்றி 'அதிமுகவைக் காப்போம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஜெயலலிதா வழியைப் பின்பற்றி சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்காக உழைக்கும் வகையில் அதிமுகவினர் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே கூறியிருந்தார்.