தமிழ்நாடு

நெல்லை: ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு திருநெல்வேலி மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், வசந்தி முருகேசன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் கல்லூர் இ.வேலாயும், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலர் ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

ஜெயலிலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா காலை உணவு வழங்கினார். 

இதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தலா 1 கிராம் தங்கம் மோதிரம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர் ஜெரால்டு ஏற்பாட்டில் அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT