தமிழ்நாடு

கமல் கட்சியில் இணைந்தார் பழ.கருப்பையா

DIN

முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளராக முன்னாள் எம்.எ.ஏ., பழ. கருப்பையா போட்டியிடவுள்ளதாகக் கூறினார்.

கல்லுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைக்குச் சென்றவர் பழ.கருப்பையா என்று புகழாரம் சூட்டினார்.

மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்துள்ளதாகவும், இதற்காக மார்ச் 1-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT