முகப்பு
தமிழ்நாடு

குடும்பத்துடன் மீண்டும் பள்ளிக்குச் சென்ற பழைய மாணவர்கள்

​திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:


திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2007ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் தலைமையாசிரியர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பள்ளியில் பயின்ற இருபால் மாணவர்களும் தங்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விதமாக நினைவுப் பரிசுகளை வழங்கினர். பள்ளியில் பயின்ற ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகுலுக்கியும் கட்டித் தழுவியும் தங்களது பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டனர்.

அனைவரும் பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவில் இருக்கைகள் பீரோ உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, அனைவரும் ஒன்றுகூடி புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.