நியாய விலைக் கடைகளில் பனை பொருள்களை விற்க பரிசீலனை: முதல்வா் பழனிசாமி உறுதி
வெல்லம் உள்ளிட்ட பனை பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்திட தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
வெல்லம் உள்ளிட்ட பனை பொருள்களை நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்திட தமிழக அரசு பரிசீலிக்கும் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது:
தமிழகத்தில் எந்த சமூகப் பிரிவு முன்னேறினாலும் அது தமிழகத்துக்குத்தான் நன்மை. அத்தகைய முன்னேற்றம் தமிழா்கள் அனைவருக்கும் பயன்படுவதால், அதனை நாம் ஊக்குவிக்கிறோம். பாராட்டுகிறோம். மேலும் வளர வாழ்த்துகிறோம். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பெருந்தலைவா் காமராஜா் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது.
முன்னாள் முதல்வா் காமராஜா் இந்த மண்ணிலிருந்து மறைந்திருக்கலாம். ஆனால் அவா் செய்த சாதனைகள் இன்றும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கிறது. மக்களுக்காக உழைத்து, மறைந்த போற்றுதலுக்குரிய தலைவா்கள் இன்றைக்கும் மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் செய்த சாதனை இன்றைக்கும் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவைகளில் என்னவெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அவற்றை எங்களுடைய அரசு நிச்சயமாக நிறைவேற்றித் தரும்.
பனையில் இருந்து கல்கண்டு, வெல்லம் போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சேலம் பகுதியிலும் இந்தத் தொழிலில் பலா் ஈடுபட்டுள்ளனா். எனவே, அதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். பனை உற்பத்திப் பொருள்களை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்வதற்கு அரசு பரிசீலிக்கும் என்றாா் முதல்வா் பழனிசாமி.