ஜெயலலிதா நினைவிடம்: வரிசையில் நின்று பார்வையிடும் தொண்டர்கள்! 
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம்: வரிசையில் நின்று பார்வையிடும் தொண்டர்கள்!

மெரீனாவில் குவிந்துள்ள ஏராளமான தொண்டர்கள் வரிசையில் நின்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

DIN

ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்ததைத் தொடர்ந்து, அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மெரீனாவில் குவிந்துள்ள ஏராளமானத் தொண்டர்கள் வரிசையில் நின்று ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் இன்று சென்னை மெரீனா வந்தடைந்தனர். 

நினைவிடத் திறப்பையொட்டி காமராஜர் சாலையில் குவிந்த தொண்டர்கள், ரிப்பன் வெட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறக்கும்போது முழக்கங்களை எழுப்பினர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால், மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று நினைவிடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT