மெரீனாவில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம் திறப்பு
சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 'நம்ம சென்னை' என்ற செல்ஃபி மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 'நம்ம சென்னை' என்ற செல்ஃபி மையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னையின் பெருமை மற்றும் மாண்பை போற்றும் விதமாகவும், அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ரூ.24 லட்சம் செலவில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் 2-ம் கட்ட மின்னணு சைக்கிள் திட்டத்தையும் முதல்வர் கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து மின்னணு சைக்கிள்களை பெண்கள் மற்றும் சிறுவர்கள் இயக்கினர். மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஆயிரம் மின்னணு சைக்கிள்கள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.