மல்லியக்கரை அருகே முன்விரோதத்தில் ஒருவர் கொலை
சேலம் மாவட்டம் மல்லியகரை அடுத்துள்ள கோபாலபுரத்தில் முன்விரோதம் காரணமாக பெரியசாமி(40)என்பவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
சேலம் மாவட்டம் மல்லியகரை அடுத்துள்ள கோபாலபுரத்தில் முன்விரோதம் காரணமாக பெரியசாமி(40) என்பவர் அடித்துக்கொல்லப்பட்டார்.
தகவல் அறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், காவல் ஆய்வாளர் என்.பாஸ்கரபாபு சம்பவ இடத்திற்கு சென்று பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலையாளி சந்திரசேகரனை தேடி வருகின்றனர். பெரியசாமிக்கு 6 வயதில் மகளும் 4 வயதில் மகனும் உள்ளனர். மனைவி சங்கீதா கடந்த வருடம் இறந்துவிட்டார்.