மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும் இந்திய கணசங்கம் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர்  மு.பெ. முத்துசாமி. 
தமிழ்நாடு

நாமக்கல்: இந்திய கணசங்கம் கட்சி மாநில பொதுக்குழு கூட்டம்

இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் நிறுவனத் தலைவர் மு.பெ‌.முத்துசாமி தலைமை வகித்தார்.

DIN

நாமக்கல்: இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் நிறுவனத் தலைவர் மு.பெ‌.முத்துசாமி தலைமை வகித்தார்.

இந்திய கணசங்கம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும். மாணவர்களை பாதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும்.

மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் இதர துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். தூய்மை தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.

முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் தாராளமாக வங்கி கடன் வழங்க வேண்டும். அருந்ததியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT