விழுப்புரத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: சி.வி. சண்முகம் தொடக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 1,666 மையங்களில் 1,71,604 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
திருவக்கரை பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து போடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் இப்பணிகளில் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 6,600 பேர் இடம்பெற்றுள்ளனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.