தமிழகத்தில் புதிதாக 3,479 பேருக்கு கரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,479 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,479 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,03,481ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 407, ஈரோட்டில் 311, சேலம் 228, சென்னை 209, தஞ்சாவூர் 206 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 73 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,132ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,35,872 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 34,477 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 1,52,105 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.