தமிழ்நாடு

சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் தீ விபத்து

DIN


சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவலறிந்ததும் எழும்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ராட்சதக் கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அண்ணா சாலையில் சாந்தி திரையரங்கம் அருகே உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வரும் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினிப் பொருள்கள் வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைப்பதோடு, கட்டடத்தில் சிக்கியிருக்குப்போரை மீட்கும் பணியிலும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்து ஏற்பட்ட கட்டடத்திலிருந்து தீப்பிழம்புகளும், கரும்புகையும் வருவதைக் காண முடிகிறது. 

இந்தக் கட்டடத்தில் இயங்கி வந்த கணினி விற்பனை நிலையத்தில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேரிட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

தீ விபத்து நேரிட்டக் கட்டடத்தில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT