கீழையூர் அருகேயுள்ள திருப்பூண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வரும் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூண்டி கிளை சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி பொருளாளர் ஓ.எஸ். இப்ராஹிம் தலைமை வகித்து கண்டன உரை நிகழ்த்தினார்.
இதில் ஒன்றியச் செயலாளர் என்.சர்புதீன், ஒன்றிய துணைச் செயலாளர் பி.அமிர் அப்பாஸ், கிளைத் தலைவர் கே.நிஜாமுதீன், மாவட்ட வழக்கறிஞர் அணியை சேர்ந்த முகம்மது மன்சூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கரோனா பெருந்தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.