மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.

DIN

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு இலவச மடிக்கணினி வழங்கியது.

இந்நிலையில், 2017-18ஆம் ஆண்டு விடுபட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, விடுபட்ட மாணவர்களுக்கு தருவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய நீதிபதி, மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி மிகவும் அவசியமானது. ஆகையால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி: விஜய்வசந்த் எம்.பி. வழங்கினாா்!

திமுக கூட்டணியில் எவ்வித விரிசலும் கிடையாது: வைகோ

பிரதமா் மோடி பாசாங்கு: காங்கிரஸ் விமா்சனம்

விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

நொய்யல் ஆற்றை முழுவதுமாக சுத்திகரிக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT