மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

விடுபட்ட மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.

DIN

தமிழகத்தில் விடுபட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு வியாழக்கிழமை பதிலளித்துள்ளது.

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முந்தைய அதிமுக அரசு இலவச மடிக்கணினி வழங்கியது.

இந்நிலையில், 2017-18ஆம் ஆண்டு விடுபட்ட மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, விடுபட்ட மாணவர்களுக்கு தருவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய நீதிபதி, மாணவர்களின் படிப்பிற்கு மடிக்கணினி மிகவும் அவசியமானது. ஆகையால் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை: தினகரன் திட்டவட்டம்!

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

SCROLL FOR NEXT