நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான ஊட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் 6 மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்று, மெல்ல படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.