முகப்பு
தமிழ்நாடு

ஏற்காட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி வேட்புமனு

சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி இன்று செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
வாழப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி
பகிர்:

சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜோதி இன்று செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவரின் மனைவியான,  முதுநிலை கணிதம் (எம்.எஸ்சி)  பி.எட்., படித்த பட்டதாரிப் பெண் ஜோதி (26). வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் இன்று செவ்வாய்க்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) பி.கே. கோவிந்தனிடம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி ஏற்காடு தொகுதி பொறுப்பாளர் கார்த்திக், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் மோகனவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
  
 

முழு கட்டுரையைப் படிக்க →