ஒரு கிலோ முள்ளங்கி ரூ.1 - விவசாயி வேதனை
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே விவசாயி ஒருவர் சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கியை ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அருகே விவசாயி ஒருவர் சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கியை ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சின்னகுன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் விவசாயி. இவர் தனது ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் முள்ளங்கி பயிர் செய்துள்ளார்.
முள்ளங்கியை நல்ல முறையில் பராமரித்து வந்துள்ளார். தற்போது முள்ளங்கி அமோக விளைச்சல் விளைந்துள்ளது. இந்நிலையில் சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் தற்போது சந்தையில் ஒரு கிலோ முள்ளங்கியை வியாபாரிகள் ரூ.1-க்கு கேட்பதால் விவசாயி மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
Advertisement
1 ரூபாய்க்கு விற்பனை செய்தால் அதனைப் பறித்து எடுக்கும் கூலி ஆட்களுக்கு கூட கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது. கடந்த முறை பயிர் செய்த போது ஒரு கிலோ முள்ளங்கி ரூ.15 முதல் 20 வரை விற்பனை செய்துள்ளார். அதனை நம்பி பயிர் செய்து தற்போது பெரிய நஷ்டமடைந்துள்ளதாகக் கூறுகிறார் விவசாயி.