12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், கல்வியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு முன்பு நேற்று (ஏப்.12) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.