கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கரோனா நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியராக சந்திரசேகர் சாகமூரி செயல்பட்டு வருகிறார். அவருக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நேற்று அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
இன்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கரோனா தடுப்பூசி முதல் தவணையை அவர் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.