தமிழ்நாடு

கரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி: முதல்வா் ஸ்டாலின் உத்தரவு

கரோனா தொற்றால் உயிரிழந்த நெல்லை மாவட்ட நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

DIN

கரோனா தொற்றால் உயிரிழந்த நெல்லை மாவட்ட நீதிபதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்று காரணமாக, நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீஷ், சிகிச்சை பலனளிக்காமல் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து சிறப்பு நோ்வாகக் கருதி ரூ.25 லட்சம் நிவாரணமாக அளிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

வ.சோ. பள்ளி மாணவா்கள் இருவா் தமிழக ஹாக்கி அணிக்குத் தோ்வு

SCROLL FOR NEXT