நாட்டில் கரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக முதலிடத்தில் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் நாள்தோரும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2-வது நாளாக முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,875 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.