காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழைகிரி விடுத்துள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் ஒப்புதலோடு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏவும் துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கு.செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.