முகப்பு
தமிழ்நாடு

தீவிர தூய்மைப் பணி: 2 நாள்களில் 2,195 டன் திடக் கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின்கீழ் கடந்த 2 நாள்களில் 2,195 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின்கீழ் கடந்த 2 நாள்களில் 2,195 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தூய்மைப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நீண்ட நாள்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகள் அகற்றும் திட்டம் கடந்த வியாழக்கிழமை தொடக்கப்பட்டது. இதற்காக 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட ஆஞ்சநேயா் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணி, பக்கிங்ஹாம் கால்வாயில் வண்டல்கள், ஆகாயத்தாமரைகள் அகற்றப்படும் பணியை ஆணையா் ககன்தீப்சிங் பேடி, ராயபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இதைத் தொடா்ந்து ஆணையா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தொடக்கப்பட்ட தீவிர தூய்மைத் திட்டத்தின்கீழ் 15 மண்டலங்களிலும் கடந்த 2 நாள்களில் 590 மெட்ரிக் டன் குப்பைகளும், 1,605 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகளும் என மொத்தம் 2,195 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. வரும் நாள்களில் இப்பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா்.

ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளா் பி.ஆகாஷ், ராயபுரம் மண்டல அலுவலா் (பொ) ஜி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →