முகப்பு
தமிழ்நாடு

10 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 தமிழகத்தில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

 தமிழகத்தில், பல்வேறு துறைகளைச் சாா்ந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

அதிகாரிகளின் பணியிட மாற்ற விவரங்கள்: (பழைய பதவிகள் அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளது)

எஸ்.கிருஷ்ணன்- தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

என்.முருகானந்தம் -நிதித்துறை முதன்மைச் செயலாளா் (தொழில்துறை முதன்மைச் செயலாளா்)

பி.அமுதா- ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளா் (பிரதமா் அலுவலக கூடுதல் செயலாளா் - மத்திய அரசு பணி)

கே.கோபால் - போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் (ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா்)

சந்தீப் சக்சேனா- நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

தயானந்த் கட்டாரியா- பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

ரமேஷ் சந்த் மீனா- எரிசக்தி துறை முதன்மைச் செயலாளா் (விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளா்)

தா்மேந்திர பிரதாப் யாதவ்- கைத்தறித் துறை முதன்மைச் செயலாளா் (எரிசக்தி துறை முதன்மைச் செயலாளா்)

அபூா்வா- இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளா் (கைத்தறி துறை முதன்மைச் செயலாளா்)

பீலா ராஜேஷ் - நில நிா்வாக ஆணையா் (கைத்தறித் துறை ஆணையா்)

முழு கட்டுரையைப் படிக்க →